×

வீடு, நிலம் வாங்க வருபவர்களை கவரும் வகையில் பாலியல் தொழில் நடத்திய ரியல் எஸ்டேட் அதிபர் ைகது: 2 இளம்பெண்கள் மீட்பு

சென்னை: அண்ணாநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், தன்னிடம் , நிலம் வாங்க வரும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஐடெக் முறையில் பாலியல் தொழில் நடத்தி வந்த ரியல் எஸ்டேட் அதிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 இளம் பெண்கள் மீட்கப்பட்டனர். சென்னை மேற்கு அண்ணாநகர் குஜ்ஜி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டிற்கு அடிக்கடி சந்தேகத்திற்கு இடமான வகையில் இளம்பெண்கள் மற்றும் வாலிபர்கள் வந்து செல்வதாக குடியிருப்பு வாசிகள் போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கவனத்திற்கு கொண்டு வந்தனர். அதன் மீது நடவடிக்கை எடுக்க கமிஷனர் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் செந்தில்குமாரிக்கு உத்தரவிட்டார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் வனிதா மேற்பார்வையில், விபச்சார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் ராஜலட்சுமி மற்றும் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான மதிமாறன்(61) என்பவர், தன்னிடம் வீடு மற்றும் நிலம் வாங்க வரும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், அழகான இளம்பெண்களை அனுப்பி அதன் மூலம் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. மேலும், இதற்காக அழகான இளம்பெண்களை மாத ஊதியத்தில் பணி நியமனம் செய்து, தனது வாடிக்கையாளர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு என தனித் தனியாக ஐடெக் பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. தொடர்ந்து விபச்சார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் தலைமையிலான போலீசார் அதிரடியாக நேற்று ரியல் எஸ்டேட் அதிபர் மதிமாறனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 இளம்பெண்கள், பாலியல் தொழிலுக்கு பயன்படுத்திய செல்போன்கள் மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட மதிமாறனை போலீசார் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

The post வீடு, நிலம் வாங்க வருபவர்களை கவரும் வகையில் பாலியல் தொழில் நடத்திய ரியல் எஸ்டேட் அதிபர் ைகது: 2 இளம்பெண்கள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Annanagar ,
× RELATED சென்னை மெரினா கடற்கரையில் ரஷ்ய நாட்டை...